பிரதமரின் ஆலோசனைக்கமைய பொலிஸ் அதிகாரிகளுக்கு நிவாரணம் – அமைச்சரவையில் தீர்மானம்

 அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான 129 பொலிஸ் அதிகாரிகளுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளுக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நிவாரணங்களைப் பெற தகுதியானவர்களின் பெயர் விபரங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளுள் தற்போது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படாத பொலிஸ் அதிகாரிகளுக்கு விரைவாக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, பிரதமரின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரவை இதனை தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.