கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட 46 தொகுதி அமைப்பாளர்களின் பதவி பறிபோகின்றது

சுதந்திரக் கட்சியின் 46 தொகுதி அமைப்பாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் இவ்வாறு கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

 
கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்டவர்களே இவ்வாறு தண்டிக்கப்பட உள்ளனர்.
அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பாத யாத்திரையில் பங்கேற்றவர்களே இவ்வாறு நீக்கப்பட உள்ளனர்.

 
அண்மையில் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேவேளை, பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.