Home அரசியல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.

சீனாசெல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் ஆறு தினங்கள் சீனாவில் தங்கியிருக்கவுள்ளதாக தெரியவருகின்றது. 

இவ்விஜயத்தின்போது சீன  ஜனாதிபதி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய உயர்மட்டத்தரப்பினரை பிரதமர் தலைமையிலான குழுவினர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 

இலங்கைக்கும் சீனாவுக்கு இடையிலான பொருளாதார மேம்பாடுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேவேளை முன்னதாக சீனப்பிரதமர் லீ கேக்கியாங்கின் அழைப்பை ஏற்று  கடந்த ஏப்ரல் மாதம் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.