85 இலட்சம் ரூபாச் செலவில் ஆய்வு கூடம் திறப்பு !

01_Fotor_Collage_Fotor
றியாஸ் இஸ்மாயில்
ஒலுவில் அல்-ஹம்றா மகாவித்தியாலயத்தில் 85 இலட்சம் ரூபாச் செலவில் அமைக்கப்பட்ட தொழினுட்ப ஆய்வு கூட திறப்பு விழா பாடசாலை அதிபர் எம்.சரிப்டின் தலைமையில் இன்று நடைபெற்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
02_Fotor_Collage_Fotor
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர்,ஏ.எல்.தவம் அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் தவித்அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித்தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா ஓய்வு பெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் யு.எம்.வாஹிட் உட்பட பலர்கலந்து கொண்டனர்.