அனுர சேனா­நா­யக்­கவின் பிணை விண்­ணப்­பம் செப்டெம்பரில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் !

anura4முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனா­நா­யக்­கவின் பிணை விண்­ணப்­பத்தை செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. 

குறித்த வழக்கு நேற்­றைய தினம் பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போது, கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மனிலால் வைத்­தி­ய­தி­லக்க இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். 

மேலும், குறித்த பிணை விண்­ணப்பம் தொடர்பில் எதிர்ப்­புகள் இருப்பின் அதனை முன்­வைக்­கு­மாறு, அதில் பிர­தி­வா­தி­க­ளாக கூறப்­பட்­டுள்ள குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், சட்­டமா அதிபர் உள்­ளிட்ட குழு­வி­ன­ருக்கும் அழைப்­பானை அனுப்­பப்­பட்­டுள்­ளது. 

பிர­பல றக்பி விளை­யாட்டு வீரர் வசீம் தாஜு­தீனின் சர்ச்­சைக்­கு­ரிய மரணம் தொடர்பில், சாட்­சி­களை மறைக்க முற்­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு, அனுர சேனா­நா­யக்க கைது­செய்­யப்­பட்டார். 

பின்னர் அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இந்த நிலையில், தன்னை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு நீதவான் நீதி­மன்­றத்தால் பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள உத்­த­ரவு, சட்­டத்­துக்கு முர­ணா­னது என உத்­த­ர­வி­டு­மாறு, அனுர சேனா­நா­யக்­கவால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள பிணை மனுவில் கூறப்பட்டுள்ளது.

 இதன்படி, இதனை மீளாய்வு செய்து, தன்னை பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் அவர் அதில் கோரியுள்ளார்.