என்னுடைய தலைமையிலேயே பாத யாத்திரை நடைபெறும் : மஹிந்த ராஜபக்ஷ

Mahinda-Rajapaksa3-640x400இணைந்த  எதிர்க்­கட்­சி­யினர்  அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஏற்­பாடு செய்­துள்ள பாத யாத்­திரை திட்­ட­மிட்­டப்­படி எதிர்­வரும் 28 ஆம் திகதி கண்­டி­யி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னவும், தான் பாத யாத்­தி­ரைக்கு தலைமை வகிக்­க­வுள்­ள­தா­கவும் முன்னாள்  ஜனா­தி­ப­தியும்,  குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற  உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். 

பாத யாத்­திரை  தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யிலே  அவர் இவ்­வாறு  தெரி­வித்­துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில்,

அர­சாங்கம் பாத­யாத்­தி­ரைக்கு தடை­வி­திக்கும் என தான் எதிர்­பார்க்­க­வில்­லை­யெ­னவும், அது  ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­ன­தெ­னவும்  தெரி­வித்­துள்ளார். 

எதிர்­வரும் 28 ஆம் திகதி ஸ்ரீத­லதா மாளிகை முன்­னா­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள அர­சாங்­கத்­துக்கு  எதி­ரான  பாத யாத்­திரை ஆகஸ்ட் 1  திகதி கொழும்பை வந்­த­டை­ய­வுள்­ளது.

 கொழும்பில் பொதுக்­கூட்­டத்­துடன் பாத­யாத்­திரை நிறை­வு­பெற ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. பொதுக்­கூட்டம்  எங்கு நடாத்­தப்­படும் என்ற விப­ரங்கள் இது­வரை  வெளி­யி­டப்­ப­ட­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அநே­க­மாக காலி­மு­கத்­தி­டலில் நடாத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

பாத யாத்­தி­ரையில்  பெரு­ம­ளவில்  முஸ்­லிம்­களைப் பங்கு கொள்ச் செய்­வ­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­வ­தற்கு  பொறுப்­பா­ள­ராக  குரு­நாகல் மாந­கர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின்  குரு­நாகல் அமைப்­பா­ள­ரு­மான அப்துல் சாத்தார் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

பாதயாத்திரையில் கலந்துகொள்வதற்காக  முஸ்லிம் மக்கள் பெருமளவு ஆதரவு வழங்கி வருவதாக  சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட  அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.