நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Namal-640x640

பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இந்த மனு பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது, பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள், மனு மீதான விசாரணையை எதிர்வரும் 3ம் திகதிக்கு ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.