அப்துல் கலாமின் நினை­வி­டத்தில் அவ­ரது சிலையை நிறு­வு­வ­தற்கு ராம­நா­த­புரம் ஜம்­இய்­யதுல் உலமா சபை எதிர்ப்பு!

Abdul-Kalamமறைந்த முன்னாள் இந்­திய ஜனா­தி­ப­தியும் அணு விஞ்­ஞா­னி­யு­மான அப்துல் கலாமின் நினை­வி­டத்தில் அவ­ரது சிலையை நிறு­வு­வ­தற்கு ராம­நா­த­புரம் ஜம்­இய்­யதுல் உலமா சபை எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலா­முக்கு பேய்க்­க­ரும்பு நினை­வி­டத்தில் சிலை எழுப்பும் பணி நடை­பெற்று வரு­கி­றது. ஆனால் சிலை எழுப்பக் கூடாது என்று ஜம்இய்யதுல் உலமா சபை எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.

சிலை எழுப்­பு­வது முஸ்லிம் ஷரீஆ சட்­டத்­திற்கு எதி­ரா­னது என்று அந்த சபை தெரி­வித்­துள்­ளது. 

இது குறித்து உலமா சபையின் உயர்­மட்டக் கூட்­டத்தை கூட்டி முடி­வெ­டுத்த பிறகு செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய உலமா சபை தலைவர் வலி­யுல்லா நூரி கூறும்­போது, “இஸ்லாம் விக்­கி­ரக ஆரா­த­னைக்கும், தனி­நபர் வழி­பாட்­டுக்கும் அனு­ம­தி­ய­ளிக்­காது. 

கலா­முக்கு மரி­யாதை செய்­வ­தென்­பது அவ­ரது உப­தே­சங்­களின் படி நடப்­ப­தாகும். வலு­வான, வளர்ந்த இந்­தியா என்ற அவ­ரது இலட்­சி­யத்தை நிறை­வேற்­று­வதும், இளை­ஞர்கள் உச்­சத்தை எட்ட கனவு காண­வேண்டும் என்று கூறி­யுளார், இதனை நிறை­வேற்­று­வ­தும்தான் கலா­முக்கு நாம் செய்யும் மரி­யாதை” என்றார். 

கலாமின் வாழ்க்­கையை சித்­த­ரிக்கும் வித­மாக, இதன் மூலம் இளை­ஞர்கள் அவ­ரி­ட­மி­ருந்து ஊக்கம் பெற நினைவு மண்­டபம், கேட்போர் கூடம், அறி­வு­மையம் அல்­லது மியூ­சியம் அமைப்­பதே சிறந்­தது.

அதி­கா­ரிகள் சிலை அமைப்­பதை தவிர்ப்­பது நல்­லது என்று உலமா சபையின் செயலர் எம்.அப்துல் ரஹ்மான் தெரி­வித்தார்.

தங்­க­ளது இந்தக் கருத்தை கலாம் குடும்­பத்­தி­ன­ருக்கு தெரி­வித்­துள்­ள­தா­கவும், ஆனாலும் ஜூலை 27- ஆம் திகதி கலாம் சிலை­தி­றப்பின் போது தாங்கள் எந்­த­வித இடை­யூ­றுமோ, ஆர்ப்­பாட்­டமோ நடத்த மாட்டோம் என்றும் உலமா சபை உறு­தி­ய­ளித்­தது. 

சிலை அமைப்­ப­தற்­கான பணிகள் ஏறக்­கு­றைய முடியும் தறுவாயில் உள்ளன.

ஐதராபாத் டி.ஆர்.டி.ஓ வளாகத்தில் உள்ளது போல் 7 அடி உயரத்திற்கு இச்சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.