ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கை..?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

write
எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரண்டு கட்சிகளும் கைச்சாத்திட உள்ளன.
இதற்கு முன்னர் இரண்டு பிரதான கட்சிகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.
இந்த உடன்படிக்கையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பது என கட்சிகள் இணங்கியுள்ளன.
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீமும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர்.
இதேவேளை, தேவை ஏற்பட்டால் மட்டும் இந்த உடன்படிக்கை மீள புதுப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.