29 பேருடன் அந்தமான் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!

சென்னையில் இருந்து அந்தமான் நோக்கி இன்று 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் மாயமானதாக தெரியவந்துள்ளது.

ratmalana_an-32

அந்தமான் – நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளையர் நோக்கி சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான அந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டு சென்றது. அடுத்த 15 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து, விமானிகள் உள்பட 29 பேருடன் சென்ற அந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருகின்றன.