சுதந்­திரக் கட்­சிக்குள் இருந்து கொண்டு இன்­றைய அரசை விமர்­சிக்க முடி­யாது: மஹிந்த சம­ர­சிங்க

நாட்டில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு சிறு­பான்மை மக்­க­ளி­னதும் மத்­திய தர கொள்­கை­யு­டை­ய­வர்­க­ளி­னதும் ஆத­ரவு அவ­சி­ய­மா­ன­தாகும் என அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்­துள்ளார். 
mahinda-samarasinghe

அத்­துடன், ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழு தீர்­மா­னத்­திற்­க­மை­யவே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் தேசிய அரசு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. எனவே கட்­சிக்குள்ளிருந்து அரசை விமர்­சிக்க முடி­யாது.

விமர்­சிக்க வேண்­டு­மானால் சுதந்­திரக் கட்­சியை விட்டு வெ ளியேற வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 

இது தொடர்­பாக திறன் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க  மேலும் தெரி­விக்­கையில், 
கடந்த மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் தனி­யொரு குடும்­பத்­தி­னரே கட்­சியின் முடி­வு­க­ளையும் நாட்டின் முடி­வு­க­ளையும் மேற்­கொண்­டனர்.

ஆனால் இன்று இந்த நிலை மாறி­விட்­டது. அனை­வ­ருக்கும் சுதந்­தி­ர­மாக செயற்­பட அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

அதே­வேளை ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய­குழு கூடி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எடுத்த முடி­வுக்­க­மை­யவே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து தேசிய அரசு அமைக்­கப்­பட்­டது.

எனவே சுதந்­திரக் கட்­சிக்குள் இருந்து கொண்டு இன்­றைய அரசை விமர்­சிக்க முடி­யாது. 

பொது எதிர்­கட்­சி­யி­ன­ருக்கு அரசை விமர்­சிக்கும் அதி­காரம் கிடை­யாது. அந்த அரு­க­தையும் இல்லை. அதே­போன்று சுதந்­திரக் கட்சிக் காரர்­க­ளுக்கு விமர்­சிக்க முடி­யாது. அது கட்­சியை மீறும் செய­லாகும்.

அவ்­வாறு விமர்­சனம் செய்­ய­வேண்­டு­மானால் சுதந்­திரக் கட்­சியை விட்டு வெளியேற வேண்டும். கட்­சிக்குள் இருந்து இரட்டை வேடம் பூண­மு­டி­யாது. 

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஜெனி­வாவில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் ஐ.நா.வில் நாம் வெற்றி பெற்றோம். ஆனால் அதன்­பின்னர் ஐந்து வரு­டங்கள் தொடர்ச்­சி­யாக எமக்கு ஏதி­ரா­கவே ஐ.நா.வில் பிரே­ரணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. 

ஜன­வரி 8 ஆம் திக­திக்கு பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரின் ஆட்­சிக்கு பின்­னர்தான் ஐ.நா.வில் இலங்­கைக்கு ஆத­ர­வாக அனைத்து நாடு­களும் இணைந்து பிரே­ரணை நிறை­வேற்­றின. இன்று ஐ.நா. உட்­பட சர்­வ­தே­சத்தின் ஆத­ரவு இலங்­கைக்கு கிடைத்­தி­ருப்­பது வெற்­றி­யாகும்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோல்­வி­ய­டையச் செய்ய முடி­யாது என்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டது. ஆனால் அது முறி­ய­டிக்­கப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமோ­க­மாக வெற்றி பெற்­றார். 

எந்­த­வொரு கட்­சிக்கும் தனியொரு கட்சிக்குள்ள வாக்குகளினால் மட்டும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.

சிறுபான்மை இன மக்களினதும், மத்தியதர கொள்கையுடையவர்களினதும் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.