மும்பைக்கு த்ரில் வெற்றி !

 213241.3

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்  நேற்று  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்கள் விரைவில் வெளியேறிய நிலையில், ரோகித் சர்மா (30) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதையடுத்து போலார்ட (33 நாட் அவுட்), பாண்டியா (61 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. காம்பீரும், உத்தப்பாவும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். யூசப் பதான் மட்டும் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.

கடைசி ஒவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், இறுதி ஒவரை அற்புதமாக வீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் மும்பை அணியை பெறவைத்தார் போலார்ட்.

213247.3