வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் வீழ்ந்து தம்மை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோருகிறார் !

Former chief of the Sri Lankan army Gen. Sarath Fonseka answers questions during a media briefing in Colombo, Sri Lanka, Sunday, Nov. 29, 2009. Fonseka has announced plans to run for president as head of a coalition of opposition parties, challenging President Mahinda Rajapaksa in an electoral battle that will pit two national war heroes against each other. (AP Photo/Eranga Jayawardena)

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் வீழ்ந்து தம்மை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

வத்தளை – ஹந்தல பகுதியில்  நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், சுயமரியாதையுடன் எவ்வாறு செயற்படுவது என்பதைத் தாம் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கற்பித்துள்ளதாகவும் அவர் தற்போது பாராளுமன்றத்தின் பக்கம் மூக்கை நுழைத்துள்ளார் எனவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.