விடைபெற்றார் டேவிட் கேமரன்

 தனது மனைவி சமந்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கேமரன் ராணியிடம் சமர்ப்பித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் கணவர் பிலிப்புடன் அரண்மனைக்கு வந்த மே, மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முன்னதாக டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தனது இறுதி அமர்வு கேள்வி நேரத்தில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார். அவர் தெரீசா மே பிரிட்டனை முடிந்த வரையில் ஐரோப்பிய ஒன்றியதோடு நெருக்கமாக வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

பிரதமர் இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன் பேசுகையில், கேமரன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்த இருந்த நிலையில் இருந்து நாட்டை உறுதியான நிலையில் விட்டுச் செல்வதாக தெரிவித்தார்.

அவர் தனக்கு ஆதரவு தந்த சக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரீசா மே வலுவான தலைமையை தருவார் என்றும் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.