சாய்ந்தமருது தோணாவில் வேன் ஒன்று மூழ்கியது!!!

DSC_0641_Fotor

எம்.வை.அமீர்

 2015-05-14 மாலை சாய்ந்தமருது தோணாவின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ரக வாகனம் ஒன்று சரியான பாதுகாப்பு வேலியில்லாத சாய்ந்தமருது தோணாவில் மூழ்கியது.

 2015-05-15 ல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களால் தோணா அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 நீரில் முழ்கிய வேன் ரக வாகனத்தை கல்முனை மாநகரசபையின் கனரக  வாகனத்தின் உதவியுடன் பிரதேச வாசிகள் வெளியே எடுத்தனர்.

 குறித்த சாய்ந்தமருது தோணாவில் ஆட்களை மறைக்கும் அளவுக்கு சல்பீனியா வளர்ந்துள்ளதாலும் சரியான பாதுகாப்பு வேலி இல்லாததாலும் இப்பிராந்தியத்தை அச்சுறுத்தும் அளவுக்கு தோணா அமைந்துள்ளது.

DSC_0665_Fotor DSC_0682_Fotor