உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும்: அமைச்சர் திலிப்

UNP-Logoஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக மீன்பிடி துறை ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தற்போது ஆட்சியமைத்திருந்தாலும் கிராம மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலையில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்காக மேற்கொண்டுவரும் முற்போக்கான வேலைத்திட்டங்களில் நாடு முழுதும் மக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர் எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.