தமது நற்பெயருக்கு களங்கம் , 500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ள மஹிந்தானந்த

தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியமையால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே நட்டஈட்டை கோரியுள்ளார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே ஆகியோரிடமே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டிபென்டர் ரக வாகனத்தின் இலக்கத்தகடு போலியானது என்றும், அது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஆனந்த அலுத்கமகே ஆகியோர் நேற்று குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் இதனை மறுத்துள்ள மஹிந்தாந்த, 500 மில்லியன் ரூபாய் நட்டஈட்டைக் கோரி தமது சட்டபூர்வ கடிதத்தை அனுப்பியுள்ளார்.