உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மிக விரைவில் தீர்மானங்கள் எடுக்கப்படும் : பைஸர்

இம்மாதம் 30ம் திகதி கலைக்கப்படவுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில்தனக்கு தனித்து முடிவுகள் எடுக்க முடியாதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசித்த பிறகே சரியான தீர்மானம் எடுக்கப்படும்என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் மிக விரைவில் தீர்மானங்கள்எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.