இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் ஸ்திரமான நிலைப்பாடு

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டுமென்பதே அமெரிக்காவின் ஸ்திரமான நிலைப்பாடு என தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் இன்னும் பல விடயங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட உள்ளமை வரவேற்கப்பட வேண்டியதாகத் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டில் ஆட்சி அமைத்த புதிய அரசாங்கம் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.