இனி எங்களுடைய 100 நாட்கள் ….!

 புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இனி எங்களுடைய 100 நாட்களாகும் என்று தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்பன்பில, கடந்த 100 நாட்களுக்குள் அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.