புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது – பாதுகாப்பு செயலாளர்

 

புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தை ஜூன் மாத இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள தீவிரவாத ஒழிப்பு சட்டமூலத்துக்கு பதிலாக,  புதிய தேசிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
இந்த சட்டமூலம் தொடர்பான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கமைய, ஜூன் மாத இறுதியில் குறித்த சட்டமூலத்தின் முதல் வரைபை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கருணாசேன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

 
தீவிரவாத ஒழிப்பு சட்டமூலத்திலுள்ள குறைபாடுகள் காரணமாக தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.