6 மாதமாக தாய்பாலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்த தாய்

baby finger dead

 

இங்கிலாந்தை சேர்ந்தவர் ரோஸ் ஜோன்ஸ் (வயது 30)  இவர் தனது குழந்தைக்கு 6 மாதங்களாக தாய்ப்பாலில் டிரக் தெர்மடோல் என்ற   வலி நிவாரண மாத்திரையை கலந்து கொடுத்து வந்துள்ளார். இதனால் குழந்தையுடன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் பரவியுள்ளது, இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். 

தனது குழந்தையை ஒரேடியாக கொன்று விடாமல் படிப்படியாக கொல்ல திட்டமிட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இங்கிலாந்தின் பிளேமவுத்கம்பைண்ட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது மிகவும் சிக்கலான வழக்காக உள்ளது என்றும் அப்பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார். 

இப்பெண்மணி மீது இதற்கு முன்னர் தனது வீட்டில் தனக்குதானே தீவைத்துக்கொண்டார் என்ற குற்றசாட்டும், வேறொரு நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தினை கையாடல் செய்துள்ளார் என்ற குற்றசாட்டும் உள்ளது.