தேசிய விளையாட்டு போட்டி

க.கிஷாந்தன்

IMG_3716_Fotor

 

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் கழகங்களுக்கிடையிலான 2016ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு போட்டியின் 2ம் கட்ட போட்டிகள் 07.05.2016 அன்று நுவரெலியா சினிசிட்டா மாநகர மைதானத்தில் வைபவ ரீதியாக காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த போட்டிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இடம்பெற்றது.

இந்த தேசிய விளையாட்டு போட்டியில் ஆரம்ப நிகழ்வு அண்மையில் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது.

IMG_3759_Fotor

 

2ம் கட்ட நிகழ்வாக 07.05.2016 அன்று நுவரெலியா ஆரம்பமான போட்டிகளுக்கு பிரதம அதிதிகளாக மலையக தேசிய முன்னணியின் தலைவர் ரிஷி செந்தில்ராஜ், மத்திய மாகாண விளையாட்டு சம்மேளனத்தின் பொறுப்பதிகாரி குமுதினி ராஜபக்ஷ உட்பட  மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி பழனி விஜயகுமார் மற்றும் ஆகியோருடன் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய விளையாட்டு போட்டியின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 15ம் திகதி நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து கழகங்களுக்கும் பரிசில்கள் அன்றைய தினத்தில் வழங்கப்படவுள்ளது.

07.05.2016 அன்று நடைபெற்ற போட்டியில் வலை பந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்ல போட்டி ஆகிய போட்டிகள் உள்ளடங்களாக பல போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

IMG_3808_Fotor

 

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் அனைத்தும் எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ள இறுதி நிகழவுகளில் கலந்து கொள்ளுமாறு நுவரெலியா பிரதேச இளைஞர் சம்மேளனம் அழைப்பு விடுக்கின்றமை மேலும் குறிப்பிடதக்கது.