அமெரிக்க அதிபர் ஒபாமா மீது ராணுவ அதிகாரி வழக்கு

obama-tears-two

 

அமெரிக்க ராணுவ அதிகாரி கேப்டன் நாதன் மைக்கேல் ஸ்மித் (28). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் குவைத்தில் உளவு துறை அதிகாரியாக உள்ளார். 

இந்த நிலையில் இவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

இத்தாக்குதலுக்கு ஸ்மித் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடந்த அதிபர் ஒபாமா பாராளுமன்றத்தில் முறைப்படி ஒப்புதல் பெறவில்லை.

எனவே, ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்தும் தாக்குதல் சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.