அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம்: பைஸர் முஸ்தபா

faizar musthafa

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த எல்லை நிர்ணயத்துக்கான கால எல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைவதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த கால எல்லையில் பிரச்சினைகள் காணப்படுவதாக ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என, பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.