மாபெரும் நடமாடும் சேவை !

hafiz-nazeer1அபு அலா 
கிழக்கு மாகாண மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை அவசரமாகப் பெற்றுக்கொடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் எடுத்த முயற்சியின் முதல் நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பொதுமக்களின் சகல பிரச்சனைகளுக்கும் உடனடியான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நாளை (14) காலை 9.00 மனியில் இருந்து மாலை 04.00 மணிவரை மாபெரும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார். 

இந்த நடமாடும் சேவையில் காணி, விவசாயம், வீதி, வடிகான், வீடமைப்பு, பாடசாலை, ஆசிரியர்கள், மாணவர்கள், முதியோர் , இளையோர், கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்று இன்னும் பல பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  சகல பொதுமக்களும் தங்களின் பிரச்சனைகள் தொடர்பில் தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட இந்நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண சகல அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், சகல திணைக்களங்களும் கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

 

மேலும், அம்பாறை மாவட்டத்துக்கான நடமாடும் சேவை கல்முனை மற்றும் அம்பாறையிலும் மிக விரைவில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் ஊடக இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.முனாஸ் மேலும் தெரிவித்தார்.