ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும்: அகில விராஜ்

ahilaviraaj

ஆசிரிய உதவியாளர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் உயர்த்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு ஆசிரிய உதவியாளர்களுக்கும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தைச் சேர்ந்த 400 ஆசிரிய உதவியாளர்களுக்கு அண்மையில் நியமனக் கடிதங்களை வழங்கிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆசிரிய உதவியாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பது குறித்த அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் இது குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டு, சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.