விபத்து – போக்குவரத்து பாதிப்பு!

க.கிஷாந்தன்

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை 20ஆம் மைல்கல் பகுதியில் வைத்து கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,  குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும், கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

IMG_2755_Fotorஇவ்விபத்து 28.04.2016 அன்று அதிகாலை 4.30 மணியளவில் இடட்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாகலையிலிருந்து கொழும்புக்கு 12 தொன் நிறையுடைய  தேயிலை தூளை ஏற்றிச்சென்ற கொள்கலனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தில் தடுப்பு கட்டை செயழிலந்ததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் ஒருவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.