இராணுவமே பொது மக்கள் இடத்தை வைத்துக் கொண்டு பலவந்தமாக செயற்படுகின்றனர் :சுமந்திரன்

கிளிநொச்சியில் அத்துமீறி செயற்பட்டது எதிர்க்கட்சி தலைவர் இல்லை இராணுவமே! என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Unknown

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் அழைப்பை ஏற்று சென்ற தலைவர் அங்கு அத்துமீறி செயற்படவில்லை.

இராணுவமே பொது மக்கள் இடத்தை வைத்துக் கொண்டு பலவந்தமாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.