இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 4000 ஆக அதி­க­ரித்து வழங்­கு­மாறு சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் கோரிக்கை!

இவ்­வ­ரு­டத்­துக்­கான இலங்­கையின் ஹஜ் கோட்­டாவை 4000 ஆக அதி­க­ரித்து வழங்­கு­மாறு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் சவூதி ஹஜ் அமைச்­ச­ர் பந்தர் பின் முஹம்மத் ஹம்ஸா அல் ஹஜ்­ஜாரிடம் கோரிக்கை விடுத்­துள்­ள­தா­கவும் இலங்கைக்கு கோட்டா அதிகரிக்கப்படும் நம்­பிக்கை இருப்­ப­தா­கவும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் தபால்­சே­வைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

M.H.A.-Haleem-Minister-e1447495186102

இதே­வேளை ஹஜ் கட்­டணம் இவ்­வ­ரு­டத்தில் என்­று­மில்­லாத வகையில் வீழ்ச்­சி­ய­டையும் எனவும் சில ஹஜ் முக­வர்கள் 4 இலட்சம் ரூபா கட்­ட­ணத்தில் சக­ல­வ­ச­தி­க­ளையும் கொண்ட ஹஜ் பொதி­முறை யொன்­றினை வழங்­கு­வ­தற்கு இணங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார். 

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் ஹஜ் கட்­டணம் தொடர்பில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கைகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘ஹஜ் யாத்­தி­ரி­கைக்­கென தெரிவு செய்­யப்­படும் விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு பய­ணத்­துக்­கான அனு­ம­திப்­பத்­திரம் அவர்­க­ளி­டமே வழங்­கப்­ப­டு­வதன் மூலம் சந்­தையில் குறைந்த கட்­ட­ணத்தில் ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்து கொள்­­வ­தற்­கான வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் ஹஜ் கட்­ட­ணங்­களில் வீழ்ச்சி ஏற்­படும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. 

இப்­போதே சில ஹஜ் முக­வர்கள் 4 இலட்சம் ரூபா­வுக்கு ஹஜ்  பயண ஏற்­பா­டு­களை சகல வச­தி­க­ளு­டனும் வழங்­கு­வ­தற்கு முன்­வந்­துள்­ளார்கள். இதனால் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களே பய­ன­டை­ய­வுள்­ளார்கள்.

புதிய ஹஜ் வழி­மு­றை­களின் கீழ் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தான் விரும்பும் முகவர் நிலை­யங்­களைத் தெரிவு செய்து கொண்டு குறைந்த கட்­ட­ணத்தில் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கு வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

கடந்த காலங்­களில் ஹஜ் விவ­காரம் நீதி­மன்ற தீர்ப்­பு­களைப் பெற வேண்­டிய நிலை உரு­வா­கி­யி­ருந்­தது. ஹஜ் விட­ய­மாக எதிர்­கா­லத்தில் நீதி மன்­றத்தை நாடி நீதி பெற்­றுக்­கொள்ளும் நிலை ஏற்­ப­ட­மாட்­டாது.

இவ்­வாறு வழக்­குகள் மூலம் பிரச்­சி­னைகள் தீர்த்துக் கொள்­வ­தற்கு இட­ம­ளிக்­காத வகையில் ஹஜ் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும்.

கடந்த வருடம் இலங்­கைக்கு முதலில் 2240 ஹஜ் கோட்­டாவே வழங்­கப்­பட்­டது.

அதன் பின்பு மேலும் 600 கோட்டா வழங்­கப்­பட்­டது. இத­ன­டிப்­ப­டையில் கடந்த வருடம் இலங்­கைக்கு கிடைத்த கோட்டா 2840 ஆகும். இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 4000 கோட்டா வழங்­கு­மாறும் கோரி­யி­ருக்­கிறோம். 

இலங்கை முஸ்­லிம்கள் ஹஜ் யாத்­தி­ரைக்கு பய­ணிக்கும் விகிதம் வரு­டாந்தம் அதிகரித்து வருகிறது. இதனை சவுதி ஹஜ் அமைச்சரிடம் விளக்கியுள்ளோம். இவ்வருடம் எமக்கு 4000 ஹஜ் கோட்டா கிடைக்குமென்ற நம்பிக்கையுண்டு.

எனவே ஹஜ் யாத்திரை மேற்கொள்ள தீர்மானித்திருப்பவர்கள் தம்மை திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றுள்ளது.