ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல :சிப்லி பாறுக்

 

IMG_4010_Fotor

 ஊடக நடுநிலைமை என்பது பல எதிர் அரசியல் புரியும் கட்சிக்காறர்களை ஒரு மேடையில் அமரச்செய்வதல்ல என்று 2016.04.24ஆந்திகதி (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இடம்பெற்ற இம்போட்மிறரின் 6 ஆவது வருட நிறைவு ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகள்வில் பிரதம அதிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார். ஊடகத்துறை அதனோடு சார்ந்த விடயங்கலென்று சொல்லுகின்றபோது ஒரு சமூகத்தினுடைய எழுச்சியையும் அதனுடைய இருப்பினையும் அதனுடைய முன்னேற்றத்தினையும் தோழில் சுமந்து செல்லுகின்ற ஒரு பாரிய சக்தியாக ஊடகத்துறையை பார்க்க முடியும்.

IMG_4017_Fotor

உலகிலே இன்று நசுக்கப்பட்டு ஆங்காங்கே நலினமாக இரத்தங்கள் ஓட்டப்படுகின்ற சமூகம் இஸ்லாமிய சமூகம் முஸ்லிம்களாக இருந்தாலும் ஊடகம் என்கின்றதொன்று சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் இவர்களுக்கு இல்லாதது துரதிஸ்டவசம் அவர்களுக்கு ஏற்படுகின்ற, அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அராஜகங்களை, அநியாயங்களை உலகிற்கு சொல்லுவதற்கு மற்றயவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இல்லாத ஒரு காரணியாக எமது சமூகத்திற்கென்று குறிப்பாக முஸ்லிம்களுக்கென்று ஒர் தனியான வீரியமிக்க ஊடகம் இல்லையென்றுதான் சொல்ல முடியும். கடந்த ஆட்சி மாற்றத்தில் மிக அதிகமாக ஊடகங்கள்தான் செல்வாக்கு செலுத்தியது. அதிலும் சமூக வலைத்தளங்கள் இந்த ஆட்சி மாற்றத்தில் அதிக பங்கினை செலுத்தியது. அறபு நாடுகளிலே ஏற்பட்ட அறபு வசந்தத்திலும் இந்த சமூக வலைத்தளங்கள் என்பது பலத்த தாக்கத்தினை கொடுத்தது. இலங்கையினுடைய ஒரு தனிப்பட்ட சிறுபான்மை சமூகம் சம்மந்தமான விடயங்களை முன்கொண்டு வருவதற்கு அதனை வெற்றிகரமாக இந்த நாட்டிலே சொல்லுவதற்கு இன்னும் பல ஊடகங்கள் ஆளுமையுடன் வெளிப்படையாக பக்கச்சார்பில்லாத ஊடகங்களாக வரவேண்டுமென்பதே எங்களுடைய அவா. பக்கச்சார்பில்லாத அல்லது நடுநிலையான ஊடகம் என்பதன் கருத்து மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை ஒன்றாக அழைத்து ஒரே மேடையில் அமர்த்துவதல்ல நடுநிலையான ஊடகம். நடுநிலையான ஊடகம் என்பது எவர் எந்தக்கட்சி சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய சமூகம்சார் பொதுவிடயங்களை உண்மைக்கு புறம்பில்லாமல் தெளிவாக சொல்வதே நடுநிலை ஊடகம். ஆகவே இந்த நடுநிலை என்பது ஊடகவியலாளர்களுக்கு உண்மையில் இருக்க வேண்டிய ஒரு தார்மீக பொறுப்பு. ஊடகவியலாளர் தனிப்பட்டரீதியில் எந்தக்கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்தியினை சொல்லுகின்றபொழுது அந்த கட்சிக்கு அப்பால் நின்றுகொண்டு அவர் பேச வேண்டும். எனக்கு முன் பேசிய சகோதரர் மூஸா அவர்கள் சொன்னார்கள்.

அரசியல்வாதிகள் என்றால் எம்சமூகத்தில் ஒரு கண்ணோட்டம் இருக்கின்றது. அரசியல்வாதிகள் என்றால் அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் வாக்குறுதி மீறுகின்றவர்கள் இன்று ஒன்றை சொல்லிவிட்டு நாளை வேறு ஒன்றை செய்வார்கள் எந்த நேரம் எந்த கட்சியில் இருப்பார்கள் என்று தெரியாது. இப்படியான ஒரு வரைவிலக்கனம் இருக்கிறது. கடந்த மூன்றரை வருடங்களாக மாகாண சபை உறுப்பினர் என்ற வரம்புக்குள் என்னுடைய சேவையை நிறைவேற்றி வருகின்றேன். இந்த காலகட்டத்திற்குள் நான் கண்டு கொண்ட மிகப்பெரிய அனுபவம் மீடியாக்களில் வேண்டுமென்று எனக்கு எதிராக பேசுகின்ற, எனக்கு எதிராக செய்தி இடுகின்ற அந்த செய்தியினை நான் பார்ப்பது கிடையாது. என்னுடைய முகபுதத்கத்தில் எனக்கெதிராக வேண்டுமென்று என்னுடன் இருக்கின்ற காழ்ப்புணர்ச்சியினால் எனக்கெதிராக ஒரு செய்தியை இடுகின்றார்கள் என்றால் அதனை நான் ப்ளக் (Block) பன்னி விடுவேன். ஏனென்றால் அச்செய்தியினூடாக எனக்கு ஏற்படும் மன உளைச்சல் சிலவேளைகளில் என்னுடைய நல்ல செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திவிடலாம். ஆகவே விமர்சனம் என்பதும் ஒருவர் மீது கொள்ளுகின்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கக்கூடாது மாற்றமாக குறிப்பிட்ட வலைத்தளத்தினூடாக அல்லது முகபுத்தகத்தினூடாக கொடுக்கப்படுகின்ற உள்ளீட்டல்கள் ஒரு அரசியல் வாதியை நல்லவனாக மாற்றுகின்ற அடிப்படையில் இருக்க வேண்டும் இதனை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கின்றது. ஊடகங்களில் எல்லாவிதமான செய்திகளும் வரவேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் ஊடகத்தில் பேசமுடியாது அன்மையில் வலைத்தளத்தில் ஒரு செய்தியை வாசித்தேன். அதில் இளைஞர்கள் மத்தியில் புதிதாக போதை உருவாக்குவதற்காக வேறு தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்ற ஜெல்களை சில பழங்களில் பூசி சாப்பிட்டால் ஒருவிதமான போதை ஏற்படுகின்றதாம். இதனை முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் வெளியிடும்போது அது பத்து பேரை திருத்த எடுக்கின்ற முயற்சியாக இருக்கும் அதேவேளை நூறு பேரை சீர்கெடுத்துவிடும்.

IMG_3979_Fotor

இவ்வாறான விடயங்கள் வலைத்தளத்திலோ அல்லது ஊடகங்களிலோ வரக்கூடாது. நாங்கள் இவ்வாறான குற்றங்களை சுட்டிகாட்டுகின்றோம் என்று சொல்லுகின்ற விடயம் இன்னும் பத்து பேரை தூண்டுகின்ற ஒரு விடயமாக அது மாறக்கூடாது. நடுநிலை, வெளிப்படைதன்மை என்பது ஊடகத் துறையை பொருத்தமட்டில் அது மிக நிதானமாக நோக்கப்பட வேண்டிய விடயம். வெளிப்படை என்பதற்காக எல்லாம் வெளிப்படையல்ல ஒருவருடைய அந்தரங்கத்தை பற்றி பேசுவது வெளிப்படையல்ல. இவ்வாறான சமூக சீர்கேடுகளைப்பற்றி இவ்வாறான விடயங்களை செய்கின்றபோது இவ்வாறு நடக்கின்றது என்பது சொல்லுவது வெளிப்படையல்ல. ஏனென்றால் அது அறியாதவர்களுக்கு நாங்கள் கொடுக்கின்ற பிளையான ஒரு வழிகாட்டலாக அமைந்துவிடலாம். ஆகவே அவ்வாறான விடயங்களில் ஊடகத்துறையிலே ஈடுபடுகின்றவர்கள் மிக கவனமாக கையாள வேண்டும். எதிர்காலத்தில் பேப்பர் மீடியா என்கின்ற ஒன்று இல்லாமல் சென்று வலைத்தளங்களினூடாக, நவீன தொழில்நுட்பத்தினூடாக மாத்திரம் தகவல்களை அறிந்து கொள்ளும் யுகத்திற்குள் நுழையும்போது இவ்வாறான நவீன தொழிநுட்பத்தினூடாக இந்த தகவல்கள் பரிமாறப்படுகின்றபோது அந்த பரிமாற்றம் என்பது ஒரு வினாடியில் இலட்சக்கணக்கானவர்களை சென்றடைகின்ற ஒரு அபாயம் இருக்கின்றது. ஆகவே நாங்கள் பதி இடுவதற்கு முன்பு நூறு வீதம் சரி பார்த்து கொள்ளவேண்டும்.

ஒரு பத்திரிக்கையில் பிழையான செய்தி ஒன்று தவறுதலாக பிரசுரிக்கப்பட்டால் அது வாசகர்களை சென்றடைவதற்கான கால அவகாசம் இருக்கின்றது. ஆனால் இலத்திரனியல் ஊடகத்தில் அவ்வாறான சந்தர்ப்பம் குறைவு ஒரு வினாடியிலும் குறைந்த மில்லி செக்கனில் நாங்கள் கொடுக்கின்ற அந்த செய்தி இலட்சக்கணக்கானவர்களை உலகளாவிய ரீதியில் பல திசைகளுக்கும் கொண்டு சேர்த்துவிடும். அதேபோன்று இந்த நல்லாட்சியினை தூரநோக்குடன் கொண்டு செல்வதற்கு குறிப்பாக இரண்டு சிறுபான்மை சமூகங்களும் தங்களுடைய தலையெழுத்தை தீர்மானிக்க இருக்கின்ற இந்த யாப்பு மாற்றம் அல்லது யாப்பு சீர்திருத்தம் என்கின்ற விடயத்தில் உங்களுடைய பங்களிப்பு மிக அதிகமாக இருக்க வேண்டும். எங்களது இரண்டு சிறுபான்மை சமூகங்களையும் விழிப்பூட்டுகின்ற, அறிவூட்டுகின்ற விடயத்தில் உங்களுடைய செயற்பாடு அதிகமாக இருக்க வேண்டும் ஏனென்றால் வெறுமனமே நான்கு பேர் கூடி அதனை கதைத்துச்சென்று அதிலே இருக்கின்ற முடிவுகளை வெளியிலே சொல்லி யாப்புக்கு வர வேண்டும் என்று சொல்வதை விட ஒவ்வொறு விடயங்களையும் ஒவ்வொன்றாக முஸ்லிம்கள் சார்ந்த விடயங்கள் தமிழ் மக்கள் சார்ந்த விடயங்கள் என்று ஒவ்வொன்றாக மிக அவதானத்துடன் பங்காற்ற வேண்டிய தேவைப்பாடு ஊடகவியலாளர்கட்கு இருக்கின்றது என தனதுரையில் தெரிவித்தார்.

 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இம்போர்ட்மிரர் இணையத்தளத்தின் பணிப்பாளர் சபையினால் பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌவிக்கப்பட்டார். அத்தோடு இந்நிகழ்வில் இம்போட்மிறர் இணையத்தளத்தின் நிருவாக சபை உறுப்பினர்களுக்கு நினைவுச்சின்னங்களும் ஏனைய இணையத்தளங்களின் பணிப்பாளர்கள் மற்றும் பிராந்திய செய்தியாளர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் இம்போட்மிறர் டீசேட் ஆகியன வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இரு அமர்வுகளாக நடந்த இந்நிகழ்வில் இரண்டாவது அமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், இம்போட் மிரர் இணையத்தளத்தின் பிரதம பணிப்பாளரும், முன்னாள் அட்டசாளைச்சேனை பிரதுச சபை உறுப்பினருமான முனாஸ், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சபீஸ், வைத்திய கலாநிதி நஹ்பர், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் பரக்கத்துல்லா மற்றும் இணையத்தளங்களின் பணிப்பாளர்கள், பிராந்திய செய்தியாளர் என பலர் கலந்துகொண்டனர்.
எம்.ரீ .ஹைதர் அலி
செய்தியாளர்