டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதே எனது இலக்கு – ஹேரத்

rangana herath

 

டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் கூறியுள்ளார்.

இலங்கை அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹேரத் சில தினங்களுக்குமுன்பு ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் தனக்கு அது பெரிய சாதனையாக அமையும் என்று தெரிவித்த ஹேரத், அதன் பிறகு தனக்கென பெரிய இலக்கை நிர்ணயித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட இலக்கு என்பதை விட அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிப்பதில் தான் எப்போதும் கவனம் செலுத்துவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹேரத் தற்போது 67 டெஸ்டில் விளையாடி 297 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் இன்னும் 3 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெறுவார்.