25 ஆயிரம் இளைஞர், யுவதிகள் கலந்து கொள்ளவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினம்

UNP-Logo70001_Fotor

 

பொரளை, கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் நாடலாவிய ரீதியிலிருந்து வரும் 25 ஆயிரம் இளைஞர், யுவதிகள் கலந்துகொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர் டாக்டர் காவிந்த ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் ‘புதிய தகீத்தை உருவாக்குவாம்’ என்ற கோட்பாட்டை ஆதரிக்கும் வகையில் நாடெங்கும் உள்ள 25 ஆயிரம் இளைஞர், யுவதிகள் கெம்பல் மைதானக் கூட்டத்தில் கலந்துகொள்வர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நாடெங்குமுள்ள இளைஞர் கழகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வாகனப் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் இந்த இளைஞர் அணிகள் பொரளை, கெம்பல் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் பங்கற்பர் என டாக்டர் காவிந்த ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.