டெல்லிக்கு வெற்றி !

சென்­னையை 6 விக்­கெட்­டுக்­களால் டெல்லி அணி வெற்றி கொண்­டுள்­ளது. சென்னை லீக் சுற்றில் எதிர்கொள்ளும் ஐந்­தா­வது தோல்வி இது­வாகும்.

சென்னை, டெல்லி அணி­க­ளுக்கு இடையில் ஐ.பி.எல். தொடரின் 49ஆவது லீக் போட்டி நேற்று ராய்ப்­பூரில் நடை­பெற்­றது. நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்ற டோனி துடுப்­பாட்­டத்தை தெரிவு செய்­தார். ஆடு­களம் பந்து வீச்­சுக்கு சாத­க­மாக அமைந்­ததால் சென்­னையின் துடுப்­பாட்ட வீரர்கள் ஓட்­டங்­களை எடுக்க தடு­மா­றி­ய­துடன் 20ஓவர்கள் நிறைவில் 6விக்­கெட்­டுக்­களை இழந்து 119 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்­றுக்­கொண்­டது. டு பிளஸிஸ் மட்டும் அதி­க­பட்­ச­மாக 29ஓட்­டங்­களை பெற்றார். பந்து வீச்சில் டெல்­லியின் சாஹீர் கான் 9ஓட்­டங்­களை விட்­டுக்­கொ­டுத்து இரண்டு விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார்

120 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய டெல்லி 20 வய­தான ஸ்ரேயாஸ் அய்யர் சென்னை அணியின் பந்து வீச்சை விளாசித் தள்­ளினார். அய்­ய­ருடன் இணைந்த யுவராஜ் சிங்கும் சிறப்­பாக விளை­யா­டினார்.

யுவராஜ் சிங் 32 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மிழக்க அய்யர் 49 பந்தில் 70 ஓட்­டங்­களைக் குவித்து இறு­தி­வ­ரையில் ஆட்­ட­மி­ழக்­காது டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாக சாஹீர் கான் தெரிவானார்.