2017ம் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் – ஜனாதிபதி

President-Maithripala-Sirisena5

 

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டில் இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றநிகழ்வு ஒன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
அநேகமான உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில், செயலாளர்கள் ஆணையாளர்களினால் உள்ளுராட்சி மன்றங்கள் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் புதிய முறையில் தேர்தல் நடாத்துவதில் காணப்பட்ட சில சிக்கல்கள் காரணமாக தேர்தல் நடாத்துவது தொடர்பிலான திட்டம் கைவிடப்பட்டிருந்தது.