ஜனாதிபதி , பிரதமர் தத்தமது கட்சியின் உறுப்பினர்களையும்,அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர்!

ranil-maihtree

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது கட்சியின் உறுப்பினர்களையும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது கட்சியின் அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே தினக் கூட்டம், அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்றைய தினம் அலரி மாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களை சந்திக்க உள்ளார். 

என்ன விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.
எனினும், அமைச்சர்கள் அல்லாத கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சந்திப்பிற்கு அழைக்கப்படவில்லை.