உத்தேச முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் – எச்.எ.அலிப் சப்ரி

Leaflets.cdr

இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் அர­சியல் அதி­காரம் பல்­வேறு சமூக சிந்­த­னை­யா­ளர்கள் மூல­மாக தொன்­று­தொட்டு அவ்­வப்­போது ஆட்­சியில் உள்­ள­வர்­களின் தயவின் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இப் போக்கு குடி­ய­ரசு யாப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதில் இருந்து தமிழ் மக்­களின் விடு­தலைக் கோஷம் கருக் கொண்­டதன் விளை­வாக முஸ்­லிம்­களின் அர­சியல் பரி­மாற்­றத்­திலும் வித்­தி­யாசப் போக்கு அவ்­வப்­போது தோன்றி மறைந்­தது. 1983ஆம் ஆண்டின் இன­க்க­ல­வ­ரத்தின் பிற்­பாடு நாட்டில் ஏற்­பட்ட பாரிய இன விரிசல் முஸ்லிம் மக்­களின் அர­சி­ய­லிலும் பாரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. மறைந்த தலைவர் மாம­னிதர் அஷ்­ரப்பின் சிந்­த­னையில் தூர­நோக்­குடன் ஆரம்­பிக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­களுக்­கான அர­சியல் முக­வ­ரியை கொடுத்து, பேரினவாதக் கட்­சி­களின் தயவில் இருந்து விடு­பட்டு சுய­மாக செயற்­படக் கூடிய அர­சியல் சூழ­லுக்கு வித்­திட்­டது.

முஸ்­லிம்கள் தமிழை தாய்­மொ­ழி­யாகக் கொண்­ட­தனால் முஸ்­லிம்­களும் தமி­ழர்­கள்தான் என்று முன்­வைக்­கப்­பட்ட கோஷத்தை உடைத்­தெ­றிந்து முஸ்­லிம்கள் தனி­யினம் என்ற ரீதியில் இனப்­பி­ரச்­சினைத் தீர்வில் தங்­க­ளுக்கும் பங்­குண்டு என்ற நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான அடித்­த­ளத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தோற்றம் ஏற்­ப­டுத்­தி­யது. இருந்­த­போ­திலும் மறைந்த தலைவர் மாம­னிதர் அஷ்­ரபின் கோரிக்­கை­க­ளான ஒன்­றி­ணைந்த வட­கி­ழக்கில் முஸ்லிம் பெரும்­பான்மை அலகு அல்­லது தென்­கி­ழக்கு அலகு மற்றும் இவற்றின் அச்­சா­ணி­யான கரை­யோர மாவட்ட கோரிக்கை 1988ஆம் ஆண்டின் முத­லா­வது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்த்தன – இந்­திய பிர­தமர் ராஜிவ் காந்தி ஒப்­பந்­தத்தில் கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வொப்­பந்­தத்தின் மூலம் முஸ்­லிம்கள் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில் 7.9.1988ஆம் ஆண்டு வட­கி­ழக்கு பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் வாயி­லாக விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் இணைக்­கப்­பட்­டது. இவ்­வி­ணைப்பால் கிழக்கில் 33வீதமாக இருந்த முஸ்லிம் இனப்­ப­ரம்பல் 17வீதமாக குறைந்­தது.

இருந்­த­போ­திலும் முஸ்லிம் காங்­கிரஸ் வட­கி­ழக்கு மாகாண சபையில் அங்கம் வகித்து, முஸ்­லிம்­களின் சார்பில் பேசும் சக்­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இனப்­பி­ரச்­சி­னைக்­கான பல ­சுற்றுப் பேச்­சு­வார்­தைகளில் கலந்துகொண்­டது. குறைந்­த­பட்ச தீர்­வாக கரை­யோர மாவட்ட கோரிக்­கையை முதன்மைப்படுத்­து­மாறு பல இடங்­களில் கேட்­டுக்­கொண்டது. அஷ்­ரபின் இக்­கோ­ரிக்­கைகள் இலங்­கையின் ஒற்­றை­யாட்­சிக்கோ இறை­மைக்கோ எவ்­வி­தத்­திலும் தீங்­கா­காது என்­பதை, வர­த­ராஜபெரு­மாளின் 1.3.1990 திக­திய ஈழ பிர­க­ட­னத்­தினை எதிர்த்­ததன் மூலம் நிரூபித்துக்காட்­டி­யது.

எவ்­வாறு வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் முஸ்­லிம்­களின் ஆலோ­ச­னை­யின்றி இணைக்­கப்­பட்­டதோ அதேபோல் அதன் பிரிவும் அமைந்­தது. ஜே.வி.பி. கந்­தளாய் பா.உ. ஜயந்த விஜே­சே­கர, சம்­மாந்­துறை ஏ.எஸ்.எம். புஹாரி மற்றும் உக­ணையை சேர்ந்த எல்.பி. வசந்த பிரி­ய­திஸ்ஸ ஆகி­யோரின் அடிப்­படை உரிமை மனு மீதான வழக்கின் உயர் நீதி­மன்ற தீர்ப்பின் மூலம் 16.10.2006ஆம் ஆண்டு வடக்கில் இருந்து கிழக்கு மீண்டும் பிரிக்­கப்­பட்­டது. மறைந்த தலைவர் அஷ்ரப் மிகவும் வலி­யு­றுத்­திய விட­யம்­தான், வட-­கி­ழக்கு இணையும் போதோ பிரியும் போதோ முஸ்­லிம்­களின் இருப்பு அவர்­களின் பூர்­வீக நிலத்தில் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேன்டும் என்­ப­தாகும்.

அடிக்­கடி பேசப்­படும் முஸ்லிம் பெரும்­பான்மை மாகாண அலகுக் கோரிக்­கைக்கு நியா­ய­மான பல கார­ணங்கள் உள்­ளன. வர­லாற்றில் நடந்து முடிந்த மற்றும் இன்னும் நடந்து கொன்­டி­ருக்கும் கார­ணங்­களும் இதி­லுள்­ளன. இதில் பிர­தா­ன­மா­னது நில கப­ளீ­கரம் ஆகும். உதா­ர­ண­மாக, முஸ்­லிம்­களின் பூர்­வீக இட­மாக இருக்கும் அம்­பாறை மாவட்­டத்தில் தொடர்ச்­சி­யாக காணிகள் பறிபோய்க் கொண்­டி­ருக்­கின்­றது. இன்­று­வரை தீர்வு காண முடி­யாத நிலப் பிரச்­சி­னை­யாக உள்ள நுரைச்­சோலை கண்டம் (1400 ஏக்கர்), தீக­வாபி பெரிய விஹாரை- 1 (585 ஏக்கர்), தீக­வாபி 2 (275 ஏக்கர்), தீக­வாபி 3 (997 ஏக்கர்), வாகல்­மடு (400 ஏக்கர்), வேல­ம­ரத்­துவெளி (200 ஏக்கர்), சியா­த­ரி­வாடி (200 ஏக்கர்), அம்­பல்­தெரு சின்ன கண்டம், வெல்­லக்கல் தோட்டம் (320 ஏக்கர்), கொண்­ட­வெட்­டுவான் (400 ஏக்கர்), மகா கன்­டிய கட்டு (400 ஏக்கர்), அறு­கம்பே – உல்லை (520 ஏக்கர்) என்­ப­ன­வற்றை உதா­ர­ண­மாக குறிப்­பி­டலாம். புனித பூமி திட்­டத்தின் மூலம் 1968ஆம் ஆண்­டைய விசேட ஆணைக்­கு­ழுவின் தலைவர் ரத்­ன­துங்க மூல­மாக சுமார் 500 ஏக்கர் காணியை தீக­வாபி அபி­வி­ருத்­திக்கு உள்­வாங்க வேன்டும் என்று சிபா­ரிசு வழங்­கினார். இதன் விளைவு, எவ்­வித முன்­ன­றி­வித்­த­லுமின்றி 185 ஏக்கர் பெரிய­வி­சாரை கன்ட கிறவுன் டைட்டில் உறு­தி­க­ளைக்­கொண்ட விவ­சாய நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டது.

1981ஆம் ஆண்டு புள்­ளி­வி­ப­ரப்­படி அம்­பாறை மாவட்டம் 1775 ச.கி. பரப்பைக் கொண்­டது. இதில் 37.2 வீதம் சனப்­ப­ரம்­பலைக் கொண்ட சிங்­க­ள­வர்­க­ளுக்கு 1340 ச.கி. நிலப்­ப­ரப்பும் 41.6வீத சனப்­ப­ரம்­பலைக் கொண்ட முஸ்­லிம்­க­ளுக்கு மிகக் குறைந்த அள­வான 263 ச.கி. நிலப்­ப­ரப்பும் வழங்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் காணி இழக்­கப்­ப­டு­வதற்கு காரணம் மொற­கொட ஆணைக்­குழு சிபா­ரிசு செய்த கரை­யோர மாவட்டம் வழங்­கப்­ப­டா­மையே என்றால் மிகை­யில்லை. மேலும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் 1990ஆம் ஆண்டு வடக்கில் இருந்து முஸ்­லிம்கள் வெளியேற்­றப்­பட்­டதை தொடர்ந்து, சட்­ட­வி­ரோத காணி அப­க­ரிப்பு தமிழ் ஆயுதக் குழுக்­க­ளினால் கிழக்­கிலும் மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாறு மொத்­த­மாக வட-­கி­ழக்கில் பல்­வேறு இடங்­களில் பல சந்­தர்ப்­பங்­களில் பல்­வேறு தரப்­பி­னரால் கப­ளீ­கரம் செய்­யப்­பட்ட நிலப்­ப­ரப்பின் மொத்த பரப்பு 40,000 ஏக்கர் ஆகும். இது விட­ய­மான முழு ஆவ­ணங்­களும் பாரா­ளு­மன்ற முறைப்­பாட்டுக் குழு­விற்கு 100 நாள் திட்­டத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் செய­லா­ள­ரினால் வழங்­கப்­பட்­டது. இருந்தபோதிலும் தமிழ் மக்­களின் தொடர்ச்­சி­யா­ன அழுத்தம் கார­ண­மாக அவர்­களின் பல காணிகள் தற்­போ­தைய ஆட்­சியில் மீட்­கப்­பட்­டுள்­ளதை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும்.

தமிழ் பேசும் மக்­களின் தாய­க­மான வடக்கு, கிழக்கில் முஸ்­லிம்­களின் அடை­யா­ளமும், காணி­களும் இவ்­வாறு திட்­ட­மிட்ட குடி­யேற்­றத்­தி­னாலும் சட்­ட­வி­ரோத காணி அப­க­ரிப்­பி­னாலும் பறிபோய் கொண்­டி­ருக்­கின்­றது. தமிழ் பிர­தே­சங்­க­ளிலும் இதே கார­ணங்­க­ளினால் காணிகள் பறி­போகின்­றன. எனவே, மொழியால் ஒன்­று­பட்ட இரு சமூ­கங்கள் தீர்­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­படும் இத்­த­ரு­ணத்தில் தமது வேற்­று­மை­களை மறந்து தம்­மைத்­தாமே நிரு­வ­கிக்கும் ஒழுங்­கு­மு­றையை கொண்ட ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க தீர்வை பெறு­வது சாலச்­சி­றந்­தது. யுத்த வெற்­றியின் பின் அமைக்­கப்­பட்ட அர­சாங்கம் கடும் போக்­குடன் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுடன் நடந்து கொண்ட விதம் நல்­லாட்­சிக்கு வித்­திட்­டது எனலாம். எனவே, சிறந்த தீர்­வுக்­கான நல்ல சந்­தர்ப்பம் இது­வாக இருப்­ப­தனால் தம்­மு­டைய அடிப்­படை கோரிக்­கை­களை நெகிழ்வுப் போக்கில் வெல்ல இரு சமூ­கமும் ஒன்­றி­ணைய வேண்டும்.

இவ்­வி­டத்தில் அஷ்­ரபின் கன­வாக இருந்த முஸ்லிம் பெரும்­பான்மை மாகாண அலகை பற்றி குறிப்­பிட வேண்டும். இது, இந்­தி­யாவின் பாண்­டிச்சேரி (புதுச்சேரி)யை ஒத்­த­தாகும். ஒரே மொழி­பேசும் இரு சமூ­கங்­க­ளுக்கு உலகில் உள்ள மிகச்­சி­றந்த நிரு­வாகப் பங்­கீட்டை வழங்­கிய உலகின் மிகப்பெரிய ஜன­நா­யக நாடான இந்­தி­யாவின் நிரு­வாக கட்­ட­மைப்பு சிறந்த எடுத்­துக்­காட்­டாகும். எனவே வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்கள் தங்­களின் உரி­மை­கனை வென்­றெ­டுக்க வேண்­டு­மாயின், இரு­ச­மூ­கமும் விட்­டுக்­கொ­டுப்­புடன் நிலத்­தொ­டர்­பற்ற அதி­காரப் பகிர்வை அங்­கீக­ரிப்­பதே சாலச்­சி­றந்­தது.

உத்­தேச முஸ்லிம் பெரும்­பான்மை மாகாணம் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை மறைந்த தலைவர் அஷ்­ரபின் நோக்கில் பார்ப்போம். முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக உள்ள அம்­பாறை மாவட்­டத்தை மைய­மாக வைத்து முஸ்லிம் மாகாணம் உரு­வாக்­கப்­பட வேண்டும். இதில் அம்­பாறை தொகு­தியில் உள்ள பெரும்­பான்மை சமூ­கத்தை சேர்ந்த மக்கள் விரும்­பினால் மத்­திய அரசின் ஆட்­சியின் கீழ் அல்­லது வேறு மாகா­ணத்­துடன் இணைய முடியும். 2012ஆம் ஆண்­டைய புள்­ளி­வி­ப­ரப்­படி சுமார் 181,817 பேர் மேற்­படி பிர­தே­சத்தில் வசிக்­கின்­றனர்.

இது ஒன்­றி­ணைந்த வட­கி­ழக்கின் மொத்த சனத்­தொ­கையில் 6.95 வீதமாகும். இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலப்­ப­ரப்பு 2148.10 ச.கி. ஆகும். ஒன்­றி­ணைந்த வட­கி­ழக்கின் மொத்த நிலப்­ப­ரப்பில் இது 11.38வீதம். இப்­பி­ர­தே­சத்தில் பெரும்­பான்மை இனத்தைப் பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தும் மக்கள் 98.51வீதம் வசிப்­ப­தனால் இவர்­களின் எதிர்­கால நலன் கருதி முன்பு குறிப்­பிட்ட முடி­வு­களை இம்­மக்கள் மேற்­கொள்­ளலாம். எனவே கீழ்­வரும் கணிப்­பீ­டுகள் அம்­பாறை தொகு­தியை நீக்­கி­யதன் பிற்­பாடு உள்ள பிர­தே­சத்தை கருத்தில் கொண்­ட­தாக அமை­கின்­றது.

அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள ஏனைய மூன்று தேர்தல் தொகு­தி­க­ளையும் உள்­ள­டங்­கிய பகு­தி­யான பொத்­துவில், சம்­மாந்­துறை, கல்­மு­னையை இணைத்து கரை­யோர மாவட்டம் உரு­வாக்­கப்­பட்டு உத்­தேச முஸ்லிம் பெரும்­பான்மை மாகா­ணத்தின் மைய­மாக அமையும். இம்­மா­கா­ணத்தின் ஏனைய பிர­தே­சங்­க­ளாக மட்­டக்­க­ளப்பு மாவட்­­டத்தில் உள்ள காத்­தான்­குடி, ஏறாவூர், ஓட்­ட­மா­வடி, வாழைச்­சேனை மற்றும் திரு­கோ­ண­ம­லையில் உள்ள கிண்­ணியா, மூதூர், குச்­சவெளி, தோப்பூர், புல்­மோட்டை மற்றும் வன்னி மாவட்­டத்தில் உள்ள விடத்தல் தீவு, முசலி, வேப்­பங்­குளம், பட்­ச­ன­சசுர், எரு­க­லம்­பிட்டி, தாரா­புரம், யாழ் நகரில் உள்ள முஸ்லிம் பிர­தே­சங்­களை கொண்­ட­தாக அமையும். இப்­பி­ராந்­தி­யத்தின் உத்­தேச பரப்பு சுமார் 3871.9 ச.கி. யை கொண்­டி­ருக்கும். வடக்கு, கிழக்கின் மொத்த நிலப்­ப­ரப்பில் 20.51வீதம் உடை­ய­தாக அமையும். சுமார் 771,551 பேர் இப்­பி­ர­தே­சத்தில் அங்கம் வகிப்பர். வட­கிழக்கின் மொத்த சனத்­தொ­கையில் 29.48 வீத­மா­ன­வர்­க­ளாவர். முஸ்­லிம்கள் 68.53 வீதமும் தமி­ழர்கள் 18.38வீதமும் சிங்­க­ள­வர்கள் 10.49வீதமாக காணப்­ப­டுவர்.

ஏனைய பிர­தே­சங்கள் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட வட­கி­ழக்­காக அமையும். இதில் சுமார் 1,663,457 பேர் குடி­யு­ரி­மை­யா­ள­ராவர். இது மொத்த வட­கி­ழக்கு சனத்­தொகையில் 63.57வீதம். இவர்­க­ளுக்கு 12860 ச.கி. அதா­வது வட­கி­ழக்கின் மொத்த நிலப்­ப­ரப்பில் 68.11வீதம் வழங்­கப்­படும்.

இன­ரீ­தியில் 71.36வீதம் தமி­ழர்­க­ளையும் 7.65வீதம் சிங்­க­ள­வர்­க­ளையும் 4.76வீதம் முஸ்­லிம்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக அமையும். இவ்­வேற்­பாடா­னது தமிழ் பேசும் இரு சமூ­கங்­களில் இருந்தும் முத­ல­மைச்­சரை பெறக்­கூ­டிய வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கி­றது. மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்­கி­ரஸை ஒரு அர­சியல் கட்­சி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­திய பின் வெளியிட்ட கொள்கை பிர­க­ட­னத்தில் வட­கி­ழக்கு தமிழ் பேசும் மக்­களின் தாயகம் என்று குறிப்­பிட்­டுள்ளார். கடந்த 30 வருட யுத்த காலத்தில் இருந்து விடுபட்டு கடும்போக்கு அரசின் பிடியிலிருந்து மீண்டு ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ள எம்மக்களின் சுமுக வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமாயின், தற்போதைய அரசுக்கு இரு சமூகமும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புகளை அங்கீகரித்து சிறந்த தீர்வு திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருந்த கடந்த ஆட்சியில் பல சந்தர்ப்பங்கள் கிடைத்த போதிலும் முஸ்லிம் தலைவர்கள் அவற்றை தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கே பயன்படுத்தினர், சமூகத்திற்காக அல்ல. அஷ்ரப்பின் மறை வுக்குப்பின் அவர் நாமத்தில் அரசியல் சுகபோகம் அனுபவிப்பவர்கள் கடந்த 15 வருடகாலத்துக்குள் ஆட்சியாளர்களின் பிடி யில் சிக்கி அவரின் கொள்கையை விற்று தங்களை வளர்த்துக்கொண்டார்கள்.

எனவே, வடகிழக்கு முஸ்லிம் மக்கள் இன்னும் ஏமாறாமல் எம் பிராந்தியத்தின் தீர்வை வென்றெடுக்க சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகள் வடகிழக்கு தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத் தத்தை கொடுப்பதே முஸ்லிம் பெரும் பான்மை மாகாண வெற்றியின் வழி.

 
 
 
  tlf;F khfhzk; 

2012

tlf;F khfhzk; 

1981

tlf;F khfhzk; 1971
nkhj;j rdj;njhif  1061315  1201605  704350 
  100% 100% 100%
rpq;fstu;        30290        24986     18210 
  2.85% 2.08% 2.59%
jkpou;     789046      937735  585418 
  74.35% 78.04% 83.11%
,];yhkpau;        33427        55426     15520 
  3.15% 4.61% 2.20%
Nuhkd; fpW];jtu;     164320      173244     77220 
  15.48% 14.42% 10.96%
Vida fpW];jtu;        43899          9144       7811 
  4.14% 0.76% 1.11%
Vidatu;             333              331          171 
  0.03% 0.03% 0.02%
nkgj;jg; gug;G (r. fp.)          8884.00     
fpuhk Nrtfu; gpupT             921