சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம்

Swiss flag

சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது.
எரித்திரியா நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகளவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.