சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

gold-bars

 

துபாயில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதித்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சஞ்சையா என்பவரின் உடைமையை பரிசோதித்த போது, எமர்ஜென்சி விளக்கில் பேட்டரி இருக்கும் இடத்தில் 7 தங்க கட்டிகளை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

700 கிராம் எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும்.

மஸ்கட்டில் இருந்து இன்று காலை சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவர் உள்ளாடையில் 3 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தார்.

300 கிராம் எடை கொண்ட அந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 9 லட்சம் ஆகும். அந்த தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.