வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்: டோனி புகழாரம்

9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது.

வெற்றி குறித்து புனே அணி கேப்டன் டோனி கூறியதாவது:–

MS-Dhoni-HD-1000x600_Fotor

 

முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று இருந்தாலும் எங்களது தொடக்கம் மிகவும் நல்லதாக அமைந்து உள்ளது என்று நான் நினைக்கவில்லை. வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம். பாராட்டு எல்லாம் அவர்களை தான் சாரும். குறிப்பாக ரஜத் பாட்டியா பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. கடைசி கட்ட ஓவர்களில் முன்னேற்றம் தேவை. ரகானே பேட்டிங் அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம். ஆடுகளத்தை குறை சொல்ல முடியாது. எங்களது பேட்டிங் தான் சரியில்லை. 121 ரன் என்பது போதுமான இலக்கு இல்லை.

இந்தப்போட்டியில் இருந்து பாடம் கற்று இருப்பார்கள். அடுத்த ஆட்டத்தில் நாங்கள் நல்ல நிலைக்கு திரும்புவோம் என்றார்.