தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினத்தை தலவாக்கலையில் நடாத்த மலையக மக்கள் முன்னனி தீர்மானம்!

க.கிஷாந்தன்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் மேதின நிகழ்வினை  தமிழ் முற்போக்கு கூட்டணியாக இம்முறை தலவாக்கலையில் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னனி  தீர்பானித்துள்ளது.

20160409_120222_HDR_Fotor

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக  விஷேட கூட்டம் 09.04.2016 அன்று தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகமான ஏ.லோரன்ஸ், நிதிச்செயலாளர், அரவிந்தகுமார் உட்பட கட்சியின்  உயர் நிர்வாகத்தினர், அங்கத்தினர் கலந்து கொண்டனர்.

20160409_120240_Fotor

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன். 09.04.2016 அன்று எமது கட்சி கூட்டத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டனியின் ஏனைய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை  நடாத்தி தலவாக்கலையில் கொண்டாட ஏக மனதாக திர்மானிக்கபட்டது. இதன் படி ஏனைய தலைவர்களுடன் பேசி சரியான தீர்மானம் எடுக்கபட்டு மே தினத்தை தலவாக்கலையில் கொண்டாடப்படும் என்று கூறினார்.