நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவை அறிமுகம்

Karu Jayasuriya_2
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க நெறி கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இந்த ஒழுக்க நெறி கோவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை அறிவித்துள்ளார்.

இதன் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பெயர்ப்புகளும் மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன.

இது சம்பந்தமான யோசனைகளையும் கருத்துக்களையும் நாடாளுமன்ற செயலாளரின் அலுவலகத்தில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த சில சம்பவங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதிக்கும் சம்பவங்கள் என சபாநாயகர் கூறியுள்ளார்.