கூட்டு எதிர்க்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன – ரஞ்சித் மத்தும பண்டார

Joint-Opposition-Press-by-Romesh-Danushka-Silva-

 

கூட்டு எதிர்க்கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் மெது மெதுவாக கூட்டு எதிர்க்கட்சியினர் பலவீனமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேங்காய் உடைத்து அரசாங்கத்தை கவிழ்க்க கூட்டு எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஊடாக மட்டுமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாளுக்கு நாள் வலிமையடைந்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.