உத்தியோகபூர்வமாக தனது ஓய்வு குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள பொலிஸ்மா அதிபர்

Illangakoon_IGP_CI

 

பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் தனது ஓய்வு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரை சந்தித்த பொலிஸ்மா அதிபர் இதனை கூறியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி இலங்கையின் 33வது பொலிஸ்மா அதிபரான இளங்கக்கோன் எதிர்வரும் 11ம் திகதி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 வருடங்கள் வரை பொலிஸ்மா அதிபராக என்.கே.இளங்கக்கோன் செயற்பட்டமை குறித்து, இதன்போது ஜனாதிபதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.