ஊடகவியலாளர்கள் மீது ஹக்கீம் மீண்டும் பாய்ச்சல் , பலீல் BA கெட் அவுட்

12924364_1797053390528001_1513840139855745603_n_Fotor

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு ஊடகவியலாளர்கள் தேவை இல்லை , இது மக்களால் வளர்க்கப்பட்ட கட்சி இதனை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் , கூலிக்கு மாரடிக்கும் ஊடகவியாளர்கள் முகாவுக்குத் தேவை இல்லை.

இன்று ஒலுவிலில் நடை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் தொகுத்திக்கான குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் இவ்வாறு உரையாற்றினார் இவர் இவ்வாறு உரையாற்றிய போது அவருக்காக மாரடிக்கும் சில ஊடகவியலாளர்களும் அங்கு காணப்பட்டனர் .

இதே வேளை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முகாவின் மூத்த போராளி பலீல் BA அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சென்று தனக்கு தேசியப்பட்டியல் வழங்குமாறு அமைச்சர் ஹக்கீம் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார் , இதற்கு பதிலளித்த ஹக்கீம் அவர்கள் உடனடியாக இவ் இடத்தை விட்டு வெளியேறி விடு என்னிடம் யாரும் வந்து தேசியப் பட்டியல் வழங்குமாறு கோரிக்கை விட வேண்டாம் , இந்தக் கட்சியில் இருக்க முடியாவிட்டால் றிசாத்தின் கட்சியில் சென்று இணைந்து விடுமாறு கடிந்துள்ளார் .

இன்றும் நாளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் சூறாவளி பயணம் மேற்கொண்டிருப்பதனால் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கடுப்பாகி விட்டார் போலும் .

12932870_1797053337194673_3562667808382125234_n_Fotor