தீர்வையற்ற சலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் – தீர்மானம் நிறைவேற்றம்

12294701_183048318753021_2944924058494616997_n_Fotor

 

2015 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் விநியோகிக்கப்பட்டதை போன்று தீர்வையற்ற சலுகை அடிப்படையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை இன்றைய (28) அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் இன்று காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பரை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மாநகர முதல்வரினால் இன்று மாலை இடம்பெற்ற சபை அமர்வில் விசேடமாக சமர்ப்பிக்கப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

12920333_183050025419517_2572303700480363105_n_Fotor

மேலும் இத் தீர்மானத்தினை எழுத்துமூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர், ஊடகத்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் எனவும் சபையில் ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது.