கடந்த வருடம் அரசு பெற்ற கடனைக் கூறுகிறார் நிதி அமைச்சர்!

2015 ஆம் ஆண்டில் 11 இலட்சத்து 87 ஆயிரத்து 231 மில்லியன் ரூபா உள்நாட்டு கடனும், 5 இலட்சத்து 56 ஆயிரத்து 370 ரூபா மில்லியன் வெளிநாட்டுக் கடனும் பெறப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ravi karunanayake

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்றின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட எம்.பி. உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டில் 7.71 சதவீத வட்டிக்கு, 9 இலட்சத்து 65 ஆயிரத்து 449 மில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனும், 3.8. சதவீத வட்டிக்கு 4 இலட்சத்து 22 ஆயிரத்து 543 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடனும் பெறப்பட்டது.

அத்துடன், 2015 ஆம் ஆண்டில் 7.48 வட்டிக்கு 11 இலட்சத்து 87 ஆயிரத்து 231 மில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனும், 4.8. சதவீத வட்டிக்கு 5 இலட்சத்து 56 ஆயிரத்து 370 ரூபா வெளிநாட்டுக்கடனும் வாங்கப்பட்டது என்றும் நிதி அமைச்சர் கூறினார்.