ஜனாதிபதியின் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு !

azmy

அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை யினுடைய தரக்குறைப்பு இடம்மாற்றத்து கெதிராக அம்பாரை மாவட்ட பதினெட்டு நிறுவனங்ளை ஒன்றிணைத்ததான சமுக ஒருமைப்பாட்டு ஒன்றியம் ஜனாதிபதி யிடம் மகஜரை கையளித்தது.

ஜனாதிபதியின் செயலாளர் சட்டத்தரணி ரஜிக கொடித்துவக்கு விடம் இழப்பீட்டு ஆய்வு மையத்தினுடைய செயலாளர் அஸ்மி ஏ கபூர் கையளித்தார்.

இதன் போது சம்மாந்துறை ,பொத்துவில் , அட்டாளைச்சேனை நிந்தவூர் ஆகிய பிரதேச சமுக ஒன்றிய பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.
அம்பாரை கரையோர பிரதேச காரியாலயங்கள் அமையப் பெற அக்கரைப்பற்று  பிரதேசமே அமைவிட அமைப்பை பெற்றிருப்பதாகவும்

அரசியல் பழிவாங்கலுக்கு அக்கரைப்பற்று  உள்ளாகும் போது ஏனைய பிரதேச மக்களும் பாதிப்படைகின்றர். என தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் நல்லாட்சி தொடர்பில் எந்த களங்கமும் ஏற்படா வண்ணம் உடனடியாக தீர்வு பெற்றுத்தப்படும் என உறுதிளிக்கப்பட்டது.