மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் ஒரு கொலையேயாகும் : தம்மாலோக தேரர் !

uduwe-dhammaloka_Fotor
மறைந்த மாதுளுவாவே சோபித தேரரின் மரணம் இயற்கையானது அல்ல. அது ஒரு கொலையேயாகும்.  அரசாங்கமே அவரைக் கொலை செய்தது. என உடுவே தம்மாலோக தேரர் இன்று தெரிவித்தார்.

 அரசாங்கத்துக்கு எதிராக அவர் செயற்பட ஆரம்பித்ததனாலேயே அரசாங்கம் அவரைக் கொலை செய்துவிட்டது. இதனாலேயே அவருடைய பிரேத பரிசோதனையைக் கூட அரசாங்கம் நடத்தாது விட்டது 

யானைக் குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுதலையாகியுள்ள உடுவே தம்மாலோக தேருடைய வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது. 

இந்த விசாரணையை முடித்துக் கொண்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் மேற்கண்டவாறு கூறினார்.