மஹிந்த ராஜபக்ஸ கால இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு !

mahinda rajapkse sarath fonseka

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட இரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த உண்மைகளை அம்பலப்படுத்தும் நோக்கில் இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் பற்றி இதுவரையில் வெளிவாரத உண்மைகளை சரத் பொன்சேகா அம்பலப்படுத்தத் தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்றில் தனது முதலாவது உரையிலும் மஹிந்த ராஜபக்ஸவை சரத் பொன்சேகா கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரையில் மஹிந்த ராஜபக்ஸ பதிலளிக்கவில்லை.